ரணில், சஜித் இடையே மோதல்

0

ஐக்கிய தேசியகட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது ஏற்பட்ட குளறுபடி காரணமாக சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது சஜித் தரப்பினர் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் பெயர் பற்றிய விடயங்கள் தொடர்பில் ரணில் தரப்பினர் முடிவெடுக்க ஆரம்பித்துள்ளமையினால் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இதன்போது சஜித் பிரேமதாச கூட்டணியின் தலைமைத்துவப் பொறுப்பு, தேர்தல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொறுப்புக்களை செயற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக்கி தங்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்வதே ரணில் தரப்பினரின் அவசியம் எனக்கூறி அவ்விடத்தை விட்டு கோபமாகக் சஜித் வெளியேறிச்சென்றார்.

இன்னும் இரு வாரங்களில் முடிவு எடுக்கப்படவேண்டும் அவ்வாறு எடுக்கப்படாது இருந்தால் கட்சி இரண்டாக பிளவுபடுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.