இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அரசாங்கம்! பொருட்களின் விலை மேலும் உயர்கிறது

0

அந்நிய செலாவணி நெருக்கடி, அரசின் தவறான முகாமைத்துவம் உட்பட பல்வேறு சிக்கல்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பான தனியார் துறையால் முன்னறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

சீனி, பால் மா, ரின் மீன், பருப்பு மற்றும் மாவு ஆகியவற்றின் கையிருப்புக்கள் இன்னொரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த இரு வாரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.