உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மற்றுமொருவர் கைது

0

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு ஊக்குவித்த அபுசாலி அபு பக்கருக்கு உதவி வழங்கிய சந்தேகத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.