உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என கோரிக்கை!

0

உறுதிப்படுத்தப்படாத பொய்யான செய்திகளைப் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளதாகவும், அனைத்து சேவை வழங்கல்களும் இடைநிறுத்தப்படும் என்றும் அண்மையில்  சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்ட போதிலும், அவற்றைப் பொலிஸ் ஊடகப்பிரிவு மறுத்திருந்தது.

இந்நிலையிலேயே உறுதிப்படுத்தப்படாத  பொய்யான செய்திகளைப் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.