ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் கொழும்பில் தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளின் விபரங்கள்

0

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் முடக்க நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 5 மணிக்கு மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எனினும் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம், கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

மட்டக்குளியின் மெத்சந்த செவன ,மிஹிஜயசெவன , மோதரையின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன , மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே வரவோ அனுமதியில்லை

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்த , ராகம, நீர்கொழும்பு , பமுனுகம , ஜா எல, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை , இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும், வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.