கிழக்கு மாகாண ஆளுநராக மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

0

கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் முஸ்லிம் அரசியல்வாதியொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தினை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்த கடிதத்தில் “2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச அரசோடு தொடர்ந்தும் இணைந்திருக்கும் ஒரே முஸ்லிம் கட்சி முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையிலான கட்சி என்றும் அனைத்து சவால்களின் பொழுதும் அரசுக்கு உறுதுணையாக அவர் செயற்பட்டவர் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு மிகவும் தகுதி தகுதியானவர் என்பதால் அவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கா.மு. மழ்ஹர்தீன் தெரிவித்துள்ளார்.