கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவியிருக்கலாம் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

0

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வெளியில் நடமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வரை டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் பொதுமக்களை தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளக் கூடியவர்களைக் கண்டறியும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, டெல்டா மாறுபாடு ஏற்கனவே சமூகம் முழுவதும் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவு முழுவதும் பயணத் தடையை நீக்குவதன் மூலம், பொதுமக்கள் பொது மற்றும் தனியார் போக்குவரத்து இரண்டிலும் பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் இதனால் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் இல்லாமல் வைரஸ் பரவுவதைத் தடுப்பது மிகவும் கடினமாகிவிடும் என்றும் பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்டா மாறுபாடு இலங்கைக்குள் எவ்வாறு நுழைந்தது என்பதை சுகாதார அதிகாரிகள் இன்னும் தெளிவாகக் கூறவில்லை என சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

இந்த மாறுபாடு இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பர் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்டா மாறுபாடு இலங்கையில் கடந்த வாரம் தெமகொட பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.