க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

0

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

நாடளாவிய ரீதியில் 86 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 111 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.