சம்மாந்துறையில் ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்பு- மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

0

சம்மாந்துறை- கல்லிரைச்சல் ஆற்றுப்பகுதியில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, மண் அகழ்வில் ஈடுபட்டவர்களினால் மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த  துப்பாக்கி,  இயங்கும் நிலையில்  உள்ளதாகவும் அமெரிக்காவின் தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.