சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா தொற்று

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்த மருத்துவமனைக்கு அவர் இன்று பலத்த பாதுகாப்புற்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சஹ்ரான் ஹசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.

கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவர்களில் சஹ்ரான் ஹசீமின் மனைவி உட்பட 28 பேர், வெலிகடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.