சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்!

0

சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அகமட்  தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20வது திருத்த சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் நேற்று இரவு ஏறாவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”20வது திருத்த சட்டம் இன்னும் முழுமைபெறாத நிலையிலேயே உள்ளதாகவும்  20வது திருத்தம் தொடர்பில் பொறுத்திருந்து இறுதி நேரத்தில் சரியான தீர்மானத்தினை எடுக்கவேண்டும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

நான்கரை வருடங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் அனைத்து ஆதரவினை வழங்கியபோதிலும் அதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்காமல் நல்லாட்சி ஏமாற்றியுள்ளதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்த மாகாணசபையினையும் இல்லாமல் செய்தது நல்லாட்சி அரசாங்கம் என தெரிவித்த அவர் சிறுபான்மை கட்சிகளும் அதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.