தனியார், அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்ய சிறப்பு அனுமதி!

0

நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இதுவரையில் 52 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 212 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.