தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு – புதிய அறிவிப்பு வெளியானது

0

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (சனிக்கிழமை) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகள் குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

அதிகபட்சம் 150 பேருடன் திருமண நிகழ்வை நடத்தவும் 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கிரியைகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வழிபட்டு தலங்களை திறப்பதற்கும் மாநாடுகள் / கருத்தரங்குகள் என்பனவற்றை 50 இருக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.