திடீர் சுகயீனமுற்ற 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!

0

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பொலிஸ் நிலையத்தின் தொலைப்பேசி செயற்பாட்டாளராக கடமையாற்றி வந்த அதிகாரி ஒருவருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

அவருடன் நெருங்கிப் பழகிய குறித்த அதிகாரிகள் தொடர்ச்சியாக கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.