நாட்டில் இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில்

0

நாட்டில் இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் தேர்தல் கடமைகள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் இருக்கும் என்றும் எஸ்.எஸ்.பி சேனரத்ன மேலும் கூறினார்.

இதேவேளை 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது, அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நிலையங்களின் பணிகளை முடிவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.