நீண்ட தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

0

மாகாணங்களுக்கு இடையிலான நீண்ட தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் தடைப்பட்டமையால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.