பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ள 6718 இலங்கையர்கள்

0

பிரித்தானியாவில் 6718 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களில் குறித்த இலங்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மரண அச்சுறுத்தல் உள்ளதாக கூறி குறித்த இல்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளனர்.

இவர்களில் 144 இலங்கையர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் பாதுகாப்பு கோரிய நபர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் தமிழர்கள் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.