காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமானை களமிறக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்திருந்தது.