பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட ரஞ்சன்!

0

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தகவலை ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.