மட்டக்களப்பில் 15 வயது சிறுவன் வாளால் வெட்டி கொலை!- இதுவரை ஐவர் கைது!

0

மட்டக்களப்பு – ஏறாவூர், கொம்மாந்துறை பகுதியில் 15 வயதான சிறுவன் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுரையில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் குறித்த 15 வயதான இளைஞர் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டார்.

இந்தசம்பவத்தில் குறித்த சிறுவனின் உறவினர்கள் இருவரும் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,  5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 19 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.