மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

0

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் 76 பேரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கைதிகள் நேற்று(வியாழக்கிழமை) முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்  பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தங்களுக்கான தண்டனையை ஆயுள் சிறைத்தண்டனையாக மாற்றுமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்  உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் சிறைச்சாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.