வௌிநாட்டில் இருந்து வருவோருக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்

0

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்தார்.