இலங்கைக்கு அருகே மற்றுமொரு சூறாவளி உருவாகின்றது – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாழமுக்க நிலைமையானது, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள பகுதிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலைமை உருவாகும் என்றும் அடுத்த வாரம் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை அடைவதற்கு முன்னர் சூறாவளி புயலாக மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.