ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களின் பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை!

0

ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஈஸ்டர் ஆராதனையின் போது, பயங்கரவாதிகளினால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 250 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே ஈஸ்டர் பண்டிகையினை முன்னிட்டு இடம்பெறும் விசேட ஆராதனைகளின் போது தேவாலயங்களின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.