எஸ்.பி.பி யின் பூதவுடல் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் நல்லடக்கம்

0

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள் துளைக்கப்பட்டு சற்றுமுன்னர் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி தன்னுடைய 74 ஆவது வயதில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று காலமானார்.

இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் நேற்று மாலை 3 மணி முதல் இன்று முற்பகல் 10.10 வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் அமைந்துள்ள பகுதியில் பூரண அரச மரியாமையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ,ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் பிரமுகர்கள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் இந்திய திரையுலக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.