பிரதமர் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்துகொள்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரா.சம்பந்தனுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.