மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

0

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து ஏறாவூரைச்சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரு பெண்களும்  வாழைச்சேனையை சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவரும் மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரும் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

மேலும் மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும்  ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும்  வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும் பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும் வெல்லவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.