மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸார் உள்ளடங்களாக மூவருக்கு கொரோனா!

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 76 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை நேற்று(புதன்கிழமை) மேற்கொண்டதில் இரு பெண் பொலிஸார் உள்ளடங்களாக மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் விடுமுறையில் தமது வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களுக்கு அங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றிய பொலிஸ் நிலையத்திலுள்ள 76 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போதே குறித்த மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.